This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
திருக்கயிலாய ஞான உலா
11.008 திருக்கயிலாய ஞான உலா (திருக்கயிலாயம் )
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலாய ஞான உலா
11.008  
திருக்கயிலாய ஞான உலா பண் - (திருத்தலம் திருக்கயிலாயம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண் அருமால் உற அழலாய் நின்ற பெருமான் [1]
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால் [2]
ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான் ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல் [3]
ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதும் அணுகாது அணுகியான் ஆதி [4]
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய [5]
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே [6]
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும் [7]
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத [8]
சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து [9]
செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள் [10]
பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை, நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள் [11]
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர் [12]
நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா [13]
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள் [14]
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த [15]
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து விற்பகரும் [16]
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா [17]
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங் கணிவயிரக் கண்டிகை பொன்னாண் பணிபெரிய [18]
ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய [19]
எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும் கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் கொண்டு [20]
கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல் [21]
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர் [22]
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒண்ணிறத்த [23]
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும் [24]
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண் [25]
நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த வருணன் மணிக்கலசந் தாங்கத் தெருவெலாம் [26]
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத் தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப மேவியசீர் [27]
ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய [28]
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக் கருத்தமைந்த [29]
கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புடைஇரட்டத் தங்கிய [30]
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக [31]
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மோகத் துருமு முரசறையப் போகம்சேர் [32]
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான் [33]
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார் [34]
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய [35]
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத [36]
அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய [37]
மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய [38]
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான் [39]
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய நாமஞ்சேர் [40]
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல் [41]
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய [42]
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும் [43]
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்ல வடமொந்தை நல்லிலயத் [44]
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும் [45]
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாம் தடாரி படகம் இடவிய [46]
மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே [47]
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய [48]
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும் மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த [49]
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி மேலை [50]
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி எமைஆளும் [51]
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச் [52]
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள் [53]
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய [54]
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி [55]
போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக ஏற்றுக் [56]
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும் [57]
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் சேமேலே [58]
வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே தூமாண்பில் [59]
வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா [60]
வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய [61]
மாட நடுவில் மலர்ஆர் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில் [62]
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும் [63]
கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய [64]
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் செங்கேழ்நற் [65]
பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகப்புனைந்து பொற்புடைய [66]
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் சோதிசேர் [67]
சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக மாளிகையின் [68]
மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு [69]
தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள் [70]
ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் பூமன்னும் [71]
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம் [72]
ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித் தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த [73]
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற் [74]
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த [75]
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள் தீதில் [76]
இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர் உடையாலும் உள்உருக்க கில்லாள் நடையாலும் [77]
கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள் வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் செவ்வன்நேர் [78]
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின் வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள் பூக்குழலும் [79]
பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும் [80]
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள் நன்றாகத் [81]
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்துடுத்துக் கோலஞ்சேர் [82]
பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத் தந்தையார் என்றொருத்தி தான்வினவ அந்தமில்சீர் [83]
ஈசன் எரியாடி என்ன அவனைஓர் காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன [84]
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் பொற்புடைய [85]
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் சீரொளிய [86]
தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு [87]
முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் ஒத்தமைந்த [88]
கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின் கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் ஒண்கேழ்நல் [89]
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில் சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து [90]
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் மடல்பட்ட [91]
மாலை வளாய குழலாள் மணம்நாறு சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும் [92]
வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக் கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா [93]
மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணிஆர் வளைதோள்மேல் மின்ன மணியார்ந்த [94]
தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க் காமன் உருவம் வரவெழுதிக் காமன் [95]
கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும் ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும் [96]
தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் தானமர [97]
நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும் நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக் [98]
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட [99]
மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய [100]
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார் [101]
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார் பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு மட்டுவிரி [102]
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் வாய்ந்தசீர் [103]
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள் [104]
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள் [105]
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு [106]
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர் [107]
தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழொளியான் [108]
தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும் பேரருளான் [109]
தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண்நோக்காது [110]
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய [111]
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர் [112]
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும் சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய [113]
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும் மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப் [114]
புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும் உருவ நுசுப்பும்மென் தோளும் மருவினிய [115]
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப் போதனைய சேவடியாள் ஒண்கேழல் [116]
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர் ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் ஊழித் [117]
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய [118]
முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள் மொய்த்தார வாரம் மிகப்பெருகி வித்தகத்தால் [119]
கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய [120]
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் தோளெங்கும் [121]
தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள் [122]
தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும் [123]
விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு அடல்வல்ல [124]
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல [125]
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த [126]
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள் [127]
எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம் நல்லாய் படுமேற் படுமென்று மெல்லவே [128]
செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய் சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் நல்லாகம் [129]
காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம் [130]
புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் மெல்லியலாள் [131]
தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி [132]
செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண்கேழ்நல் [133]
திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் பொங்கொளிசேர் [134]
மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும் [135]
இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே [136]
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர் [137]
இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள் அடியிணைமேல் [138]
பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப் [139]
பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள் [140]
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் முன்னமே [141]
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய [142]
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையுங் கைவிட்டுப் பொன்னனையீர் [143]
இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்கென்று சென்றவன்தன் [144]
ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் ஒண்கேழ்நல் [145]
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும் சாந்தம் திமிரும் முலையார்க்கும் பூந்துகிலைச் [146]
சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற் றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழொளிய [147]
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள் நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி [148]
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா [149]
மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும் இருள்சீர் புலரியே ஒப்பாள் அருளாலே [150]
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பந்தீர்ந் [151]
தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில் [152]
சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும் [153]
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர் [154]
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால் வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர் [155]
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று பறையறைவ போலும் சிலம்பு முறைமையால் [156]
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல் ஓரா தகலல் உறாதென்று சீராலே [157]
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே [158]
பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி வாய்ந்தசீர் [159]
நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப்பகரும் [160]
காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன் தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி யாவரையும் [161]
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும் கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப் [162]
பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து கூழைய வாகிக் கலைகரந் [163]
துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய [164]
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் பொங்கெழிலார் [165]
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் விற்பகரும் [166]
தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேளாய [167]
நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை ஏணார் ஒழிக எழிலொழிக பேணும் [168]
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின் நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய [169]
தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல் [170]
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு [171]
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல் [172]
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர் [173]
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் கட்டரவம் [174]
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் எஞ்சாத [175]
பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச் [176]
சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க் கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கொத்த [177]
கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம் நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் அங்கையால் [178]
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள் சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்துடனே [179]
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு [180]
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து [181]
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய [182]
தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த [183]
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் வண்டலம்ப [184]
யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப் [185]
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த [186]
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல் [187]
கண்அவனை அல்லாது காணா செவியவன தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா அண்ணல் [188]
கழலடி யல்லது கைதொழா அஃதால் அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் றெழிலுடைய [189]
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால் [190]
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் எரிஇரவில் [191]
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு கேடில்சீர் [192]
வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே [193]
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவுஎன்று நொந்தாள்போல் [194]
கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் கொட்டிமைசேர் [195]
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி [196]
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு. பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின் உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க் காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா. [197]
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400